திங்கள், 25 மார்ச், 2013

சோரியாஸிஸ் டிப்ஸ்

மழைக்காலத்தில் சளி இருமல் மட்டுமல்ல, சில தோல் நோய்களும் 

அதிகம் வாட்டும். குறிப்பாக சோரியாஸிஸ் எனும்  தோல் நோய் 

சிலருக்கு மழைக்காலத்தில் அதிகம் துன்பம் தரும். நன்கு குணமாகி, 

அப்பாடா ஒருவழியாய் ஓய்ந்து விட்டது சோரியாஸிஸ் என பெருமூச்சு 

விடுகையில், மடமடவென மீண்டும் தலைதூக்கும் இந்த நோய், சிலருக்கு 

குளிர்காலத்தில்/ பனிக்காலத்தில் பெரும் தொல்லை தருவதுண்டு. 

அவர்கள் இப்பருவத்தில் நோய் இல்லையென்றாலும் முன்பு வந்து போன 

இடங்களில் சித்த மருத்துவ தைலங்களைப் பூசுவதும், உணவில் புளிப்பை 

அறவே தவிர்ப்பதும் நல்லது. மீன், நண்டு, கோழிக்கறி-போன்றவர்றை 

மழைக்காலத்தில் சோரியாஸிஸ் நோய் உள்ளவர்கள் தவிர்ப்பதும் 

நல்லதே. ஆனால், நல்ல உடலினருக்கு மழைக்காலத்தில் புளிப்பு நல்லது.

அகத்தி மருத்துவம்

சோரியாஸிஸ் குணமாக: 

சோரியாஸிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய் ரத்தம், எலும்பு போன்றவற்றின் சீர்கேடால் நமது சருமத்தைப் பாதிக்கும். இதற்கு இன்றைய நவீன மருத்துவம்கூட முறையான மருந்துகள் இன்றி தவித்து வருகிறது. ஆனால் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் இந் நோயை முற்றிலும் குணப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அகத்தி "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு மிகச் சிறந்த பலன் தருவதை என் அனுபவத்தில் கண்டி ருக்கிறேன்.
 

அகத்திக்கீரை, தேங்காய் பத்தை வகைக்கு 100 கிராம்; சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 100 கிராம் இவற்றை நீர் சேர்த்து விழுதாய், அதாவது துவையல்போல் அரைத்து, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தேய்த்துக் குளித்துவர, தோல் நோய்கள் அனைத்தும் விலகும். "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு முறையாக உள்மருந்து எடுத்துக் கொண்டு, இதனை வெளிப்பூச்சாய் பயன் படுத்தி வர, நோயிலிருந்து விரைவில் மீண்டு விடலாம்.